Saturday, April 17, 2010
உலக தமிழ் செம்மொழி மாநாடு!!! யாருக்கு லாபம் - தமிழுக்கா - நடதுபவருக்கா - மக்களுக்கா ???
கடந்த நான்கு , ஐந்து மாதங்களாக கோவை முழுவதும் மாநாட்டிற்கான பணிகள் நடந்து வருகின்றன , இல்லை தவழ்ந்து வருகின்றன.... சமிபத்தில் ஒரு பிரபலமான வார இதழை படித்து கொண்டு இருந்த போது, சிறிதும் மனசாட்சி இல்லாமல் , அந்த பணிகள் பற்றி எழுதி இருந்தார்கள்... அமைச்சர்கள் பேட்டியும் வேறு. அனைவரும் வழக்கம் போல் முதல்வரை புகழ்ந்து தள்ளி இருந்தார்கள்.. பத்திரிக்கைகள் ஜால்ரா அடிப்பதை நிறுத்தினால் தான் , மாற்றம் வரும்.. அங்கு உண்மையாக அப்படி நடக்கிறதா என்றால், இல்லை- சாதாரண மக்கள் சிரிப்பார்கள்... இந்த மாநாட்டினால் , சாலை ஓரத்தில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு விட்டன.. பெயருக்காக சாலை ஓர பூங்கா அமைத்தார்கள்... கவனிப்பாரின்றி அது சேதம் அடைந்து வருகிறது.... இருந்தாலும் அனைத்தும் சரி செய்யப்படும், அதுவும் மாநாடு நடக்கும் சமயம் மட்டும்... இதற்காகவா கோடிகளை இரைகிறார்கள். ஒருவரது விருப்பத்திற்காக மக்களின் கோடி கணக்கான பணம் விரயம் செய்ய படுகிறது..... இதனால் தமிழ் வளரும் என்றால் சிரிப்பு தான் வருகிறது.... முன்பே மக்கள் கடும் வெயிலால் வாடுகிற போது, மரங்களை வெட்டு வது சரியா??? பெங்களுருவில் மரங்களை வெட்டாமல் போக்குவரத்தை சரி செய்யும் போது , அனைத்திலும் பெங்களுருவரை விட சிறிய கோவையில் செய்வது சிரமமா???? கடைசியில் , உலக செம்மொழி மாநாட்டை நடத்தி காட்டியதற்காக, " உலக செம்மொழி சுடர் " விருது சிலருக்கு வழங்க படும்... அப்பாவி மக்கள் மட்டும் அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்கள்... மாநாடு நடக்கும் சமயம் அங்கு திருமணம் நடை பெறுவதற்கு மறைமுக தடை விதிக்க பட்டு இருக்கிறது... கண்டிப்பாக இவர்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றாக அனுபவிப்பார்கள்......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment