Sunday, April 03, 2011

ஆரியர், திராவிடர் என்று ஊரை ஏமாற்றும் உலக மகா நடிகர்.. இவரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

ஒரு முறை திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவம் இது. அப்போது கடலூர் தொகுதியின் திமுக எம். எல்.ஏ ஆக இருந்த ஆதி.சங்கர் சட்டசபையில் இருந்து கருணாநிதி அவர்களால் வெளியேற்றப்பட்டார்.

கழகத்தின் கொள்கைகளுக்கு அவர் எதிராக நடந்துகொண்டார் என்று கண்டிக்கப்பட்டார். ஆதி.சங்கர், மன்னிப்பு கடிதம் தந்தே பிறகே அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?



ஆதி.சங்கர், அன்று சட்டசபைக்கு வரும்போது, அவர் தனது நெற்றியில் விபுதி குங்குமம் இட்டு இருந்தார் என்பதே.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது கருணாநிதி, இவ்வாறு பேசினார்.

"முன்பு "முந்திரா' ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். "முந்திரா' ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர்.

இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? "ஸ்பெக்ட்ரம்' ஊழலை நிரூபிக்க தயாரா? . தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்".என்று "விளக்கம்" அளித்தார் அவர்.

ஆனால், அவர் அடிக்கடி பயன்படுத்தும் ஆர்யாள்,பார்ப்பனர் ஆகியோரிடமே இப்போது தஞ்சம் அடைந்து இருக்கிறார் "பகுத்தறிவு தந்தை".

திருநள்ளார் சனி பகவான் கோயிலில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் தரிசனம் செய்ததோடு, முதல்வர் கருணாநிதி பெயரில் சனி பகவானுக்கு தயிராபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து எள்தீபம் ஏற்றி , காக்கைக்கு அளித்தார்.

இந்த பரிகாரங்களை முன்னின்று செய்தவர்கள் ...பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்களே.

கும்பகோணம் அருகே அய்யாவாடி பிரிதியங்கரா காளி கோயில் இருக்கிறது. பண்டைய காலத்தில் சோழ மன்னர்கள், போர்களத்திற்கு செல்லும்முன் அங்கு சென்று யாகம் செய்துவிட்டு வருவார்கள். ஜெயலலிதா அவர்கள் இந்த யாகத்தை வெளிப்படையாக செய்து வருகிறார்.

ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒவ்வொரு தேர்தலின் போதும் அங்கு சென்று யாகம் செய்து வருகிறார்கள் ரகசியமாய். இந்த முறையும் அவ்வாறே அங்கு சென்று யாகம் செய்து இருக்கிறார்கள்.

இங்கும் யாகத்தை நடத்தியவர்கள்.....பார்ப்பனர்களே.

திராவிட கழக கி.வீரமணி ஏன் இதற்கெல்லாம் கருத்து தெரிவிக்கவில்லை. சுயமரியாதை,பகுத்தறிவு போன்றவை எல்லாம் இவர்களுக்கு அரசியல் வியாபாரம் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணங்கள் உண்டா??

சமிபத்தில், பத்திரிக்கையாளர் பேட்டியில், "ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவில் அனைவரும் ஏற்பார்களா?" என்ற கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில்,

"இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயகரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழகச் செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்".

இந்த தருணத்தில் யாராவது, சங்கர மடத்திற்கு சென்று, ஜெயேந்திரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பார் என்று ஆருடம் சொன்னால் , ராவோடு ராவாக அதையும் செய்ய பெரியாரின் சீடர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆருடம் சொல்ல தான் ஆள் இல்லை !

நன்றி - இட்லி வடை

Friday, April 01, 2011

நல்ல வரலாறு படைப்போம்!

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..



குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.

இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..



இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.



ஏனென்றால்,

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.



இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...



குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய

உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.

(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)



ஆனால்... இன்று..



அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக

கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.



மீண்டும் உங்கள் நினைவிற்கு..



குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது



- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.

-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.



இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)



நாமும் No-1 தான் (இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)



அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.

உலகம் நம்மை காரி உமிழும்.



இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.

நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

Saturday, March 05, 2011

ஏன் தொடங்கினார் எம்.ஜி.ஆர்!

ஞாநி

அ.தி.மு.க. பிரமுகர் சேகர்பாபு தி.மு.கவில் தம் ஆதரவாளர்களுடன் இணைந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, கலைஞர் கருணாநிதி, “எம்.ஜி.ஆர் என்ன நோக்கத்துக்காக அ.தி.மு.க.வைத் தொடங்கினாரோ அதிலிருந்து அது விலகிப் போய்விட்டது. இதைத் தாமதமாக உணர்ந்தாலும், உறுதியான முடிவு எடுத்து இப்போது சேகர்பாபு அதிலிருந்து விலகி நம்மிடம் வந்திருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.

இப்படி விசித்திரமான கருத்துகளை, வரலாறு தெரியாத ஒரு தலைமுறையைக் குழப்பும் விதத்தில் விதைப்பது கருணாநிதி தொடர்ந்து பின்பற்றி வரும் சாமர்த்தியமான உத்தி.

என்ன நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர்., அ.தி. மு.க.வைத் தொடங்கினார்; அதிலிருந்து எப்படி அ.தி.மு.க. விலகிவிட்டது என்பதை மட்டும் கருணாநிதி எச்சரிக்கையாகச் சொல்லாமல் விட்டு விட்டார். அது என்ன என்று தெரியாதவர்கள், எம்.ஜி.ஆர். ஏதோ உன்னதமான சமூகக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்க கட்சி தொடங்கியதாகவும், அதிலிருந்து அந்தக் கட்சி விலகிவிட்ட தாகவும் அந்த மேன்மை யான கொள்கைகளை எல் லாம் தொடர்ந்து நிறை வேற்றுவது, தி.மு.க.தான் என்றும் மயக்கம் கொள்ள வைப்பதே கருணாநிதியின் நோக்கம்.

உண்மையில் ஏன் எம்.ஜி.ஆர் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் அ.தி.மு.க.வைத் தொடங்கி னார் என்ற காரணங்கள் இப்போது ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே நினைவில் இருக் கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளைக் குழப்புவதற்காகவே கருணாநிதி இப்படிப் பேசியிருக்கிறார் என்பதில் சந்தேக மில்லை.

கருணாநிதி என்ற தீய சக்தியை அரசியலிலிருந்து அகற்றவும், அண்ணா உருவாக்கிய தி.மு.க.வின் அசல் நோக்கங்களைக் காப்பாற்றவும்தான், அ.தி.மு.க.வைத் தாம் தொடங்கியதாக 1972லிருந்து 1987ல் அவர் இறக்கும்வரை, எம்.ஜி.ஆர் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். இறக்கும் வரையில் கருணாநிதியால் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை என்பதும் இன்னொரு முக்கிய வரலாற்றுச் செய்தி.

1972ல் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியுடன் கருணாநிதிக்கும் அவரது ஆட்சிக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் அளித்தார். அவற்றுக்கெல்லாம் சட்டமன்றத் தில் கருணாநிதி அளித்த மழுப்பலான பதில்களை அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. பிரதமர் இந்திரா காந்தி நீதிபதி சர்க்காரியா கமிஷனை நியமித்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கச் செய் தார். சர்க்காரியா கமிஷன், கருணாநிதி அரசு ஊழல்களைச் செய்திருப்பதாகத் தெளிவாக அறிவித்தது. அதன் அடிப்படையில் கருணாநிதி மீதும் அவரது சகாக்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளைத் திரும்பப் பெறச் செய்ய, கருணாநிதி படாத பாடுபட்டார். அப்போது அவரது கூட்டாளியாக இருந்த ஜனதா கட்சி ஆட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் வழக்குகளைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார். வழக்குப் போட்ட இந்திரா காந்தி காலிலேயே மறுபடியும் விழுந்துதான் கருணாநிதி அந்த வழக்குகளைத் தொடர விடாமல் தப்பிக்க முடிந்தது. இந்தச் சரித்திரமெல்லாம் நன்றாகத் தெரிந்த காங்கிரஸ்காரர்கள்தான் ப.சிதம்பரமும், தங்கபாலுவும்.

1980ல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டு எம்.பி.தேர்தலில் ஜெயித்த பின்னர், எம்.ஜி.ஆர். அரசைக் கலைக்கும்படி இந்திராவை கருணாநிதி தான் வற்புறுத்தினார். 356ஆம் பிரிவின் கீழ் மாநில அரசைக் கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கக்கூடாது என்று தி.மு.க அரசு கலைக்கப்படும்போதெல் லாம் சத்தம் போடும் கருணாநிதி, அதே 356ஐ எம்.ஜி.ஆருக்கு எதிராகப் பயன்படுத் தத் தயங்கவே இல்லை.

ஆனால், எம்.ஜி.ஆர். ஆட்சிக் கலைப்புக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் அணி படு தோல்வி அடைந்தது. அதன் பின்னர் காங்கிரஸ் அ.தி.மு.க. பக்கம் போய்விட்டது. அடுத்த 13 வருடங்கள் அ.தி.மு.க.வுடன்தான் இருந்தது.

அப்போது சர்க்காரியா கமிஷன் தொடர்பான ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க காங்கிரஸிடம் சரணாகதி அடைந்த கருணாநிதி, இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தம் குடும்பத்தினரும் மாட்டி விடாமல் தடுப்பதற்கு காங்கிரஸிடம் சரணாகதி அடையும் நிலையில் இருக்கிறார்.

அதிக இடங்கள் தேவை, ஜெயித்தால் கூட்டணி ஆட்சி; ஆட்சியில் காங்கிரஸுக்கும் பங்கு;

துணை முதல்வர் பதவி உண்டு என்ற கோரிக்கைகளை இப்போது காங்கிரஸ் வலியுறுத்தி, பேரம் பேசிக் கொண்டிருக்கிறதல்லவா? இதே பேரத்தை 1980லும் பேசியது. அப்போது அத்தனை கோரிக்கைகளையும் ஒப்புக்கொண்டு, காங்கிரசுடன் சேர்ந்து குறைந்தபட்ச பொதுத் திட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டுத் தேர்தல் அறிக்கையையும் கருணாநிதி வெளியிட்டார். கூட்டணி ஜெயித்தால் முதல்வர் பதவியும் தி.மு.க.வுக்கு இல்லாமற் போய்விடுமோ என்ற அளவுக்கு தி.மு.க.வினருக்கு அப்போது பயம் இருந்தது.

இந்திராவே பகிரங்கமாக, நாங்கள் ஜெயித்தால் கருணாநிதிதான் முதல்வர் என்று அறிவித்தார். ஆனாலும் ஜெயிக்கவில்லை; காரணம் எமெர்ஜென்ஸி ஒடுக்குமுறைகளில் அல்லற்பட்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் காங்கிரஸ் உறவை விரும்பவில்லை. எம்.ஜி.ஆரை வைத்து தி.மு.க.வை உடைத்த நாம், ஏன் திரும்ப தி.மு.க.வுக்கு உயிர் தரவேண்டும் என்ற அதிருப்தி காங்கிரஸாருக்கு இருந்தது. ஒரே அணியில் இருந்துகொண்டு விரோத மனநிலையில் வேலை செய்தார்கள். எம்.ஜி.ஆர். அரசை டிஸ்மிஸ் செய்தது அவருக்குப் பெரும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது.

இப்போதும் அதே போன்ற சூழ்நிலைகள் நிலவுகின்றன. கூட்டணி என்றும் பாராமல் ராசாவைக் கைது செய்து காங்கிரஸ் ஆட்சி சிறையில் அடைத்திருப்பது தி.மு.க.வினர் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒழுக்க சீலர் என்ற பிம்பத்துடன் வலம்வந்த மன்மோகன் ஆட்சிக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று நடத்தியிருக்கும் தி.மு.க.வை நாம் ஏன் தாங்கிப்பிடிக்க வேண்டும் என்ற எரிச்சல் காங்கிரஸாரிடம் இருக்கிறது.

வீரமணி, விடுக்கும் வீராப்பான அறிக்கையின் அடிப்படையில் காங்கிரஸை உதறிவிட்டு வரும் நிலையில் நிச்சயம் தி.மு.க. இல்லை. காங்கிரஸைப் பொறுத்தமட்டில் கூடுதலாக பத்து சீட் கொடுக்க தி.மு.க. முன்வந்தாலும்கூட லாபம்தான். தேர்தலுக்குப் பின் இழுபறி நிலை ஏற்பட்டால், அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேரவும் காங்கிரஸ் தயங்கப் போவதில்லை. தி.மு.க. இப்போது குடும் பச் சண்டையாலும் ஸ்பெக்ட்ரம் நெருப் பாலும் எரிகிற வீடு. அதில் பிடுங்கினவரை லாபம் என்பதே காங்கிரஸின் அணுகுமுறை.

தி.மு.க.வுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ‘தருமம் தலைகாக்கும்’ என்பதுதான். அரசு கஜானாவிலிருந்து அள்ளி அள்ளி வீசி இலவசம் என்ற பெயரில் செய்திருக்கும் ‘தானதர்மங்கள்’, இனி தேர்தல் நேரத்தில் செய்யப்போகும் ‘தர்மங்கள்’ எல்லாம்தான் தங்களைக் கரையேற்றும் என்று அது நம்பிக் கொண்டிருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், எந்த நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவைத் தொடங்கினாரோ அந்த நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. இந்தத் தேர்தல்தான் அதை இறுதியாகத் தீர்மானிக்கப் போகிறது. எம்.ஜி.ஆரின் கனவை ஜெயலலிதா சாதிப்பாரா, அல்லது எம்.ஜி.ஆரின் கனவு கனவாகவே போய்விடுமா என்பது தீர்மானிக்கப்படும்.